சந்திரனுக்கும் மலைக்கும்
நிவாய் விளங்குதலா னீள்வான் படிந்து
சிலபோ துலாவுதலாற் சென்று – தலைமேல்
உதித்து வரலா லுயர்மா மலையை
மதிக்கு நிகராக வழுத்து. காளமேகம்
வறுமையினால் அயனை நிந்தித்துப் பாடியது
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித் தானா
இல்லைத்தான் பொன்னைத்தா னெனக்குத்தான்
கொடுத்துத்தான் னிரட்சித் தானா
அல்லைத்தான் சொல்லித்தானாரைத்தா
னோவத்தா னையோவெங்கும்
பல்லைத்தான் றிறக்கத்தான் பதுமத்தான்
புவியிற்றான் பண்ணினானே. இராமச்சந்திர கவிராயர்
ஒருமாதின் நயனத்தினழகை வியந்து பாடியது.
மஞ்சுமஞ் சுங்கைப் பாராஜசேகர மன்னன்வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள்பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுனது நயனங்களே. நமச்சிவாயப்புலவர்
அரும் பதங்கள்
நீள்வான் - பரந்த வானம்
போது - மொட்டு, பொழுது
வழுத்து - துதிசெய்
மாமலை - பெரியமலை
பதுமத்தான் - தாமரைப் பூவில் இருக்கும் பிரமன்
இல்லைத்தான் - வீட்டைத்தான்
அல்லைத்தான் - துயரத்தைத்தான்
மஞ்சும் - மேகம்
படைவேள் - மன்மதன்
பகழி - அம்பு
நயனங்கள் - கண்கள்
வெற்பில் - மலையில்
NIE | Ministry of Education | School Net | Department Examination
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others