கம்ப இராமாயணம்
வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தமிழில் இராமாவதாரம் என்னும் காப்பியமாக்கியவர் கம்பர். இதனால் இவர் ஆக்கிய இந் நூல் கம்ப இராமாயணம் என வழங்கப்படுகின்றது. காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் தமிழ் இலக்கியங்களில் தலையாய இடம் பெற்றுள்ளது கம்ப இராமாயணமே என்பர். மேற்படி அம்சங்களில் மூல நூலையே விஞ்சுமளவுக்குக் கம்பரின் படைப்பு அமைந்துள்ளதாகவும் சிலர்வார்ப்புரு:Kamba Ramayanam: A Study in English - V.V.S.Aiyar கூறுகின்றனர். "
பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களாகப் பிரிக்கபட்டுள்ள இக்காவியம் 123 படலங்களையும் ஏறத்தாழ 22,000 பாடல்களையும் கொண்டது.